ஆப்நகரம்

Independence Day: தேசியக் கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக வேக வேகமாக இறக்கிய அமித் ஷா!

தேசியக் கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, வேக வேகமாக இறக்கிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

Samayam Tamil 15 Aug 2018, 4:55 pm
தேசியக் கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, வேக வேகமாக இறக்கிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
Samayam Tamil amit


நாட்டின் 72வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போன்று, சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதே போன்று இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும், அரசியல் கட்சி அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, அவர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்கு பதிலாக வேக வேகமாக இறக்கிவிட்டதால், தேசியக் கொடி கீழே இறங்கியது. இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து அமித் ஷா மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், தேசியக் கொடியையே சரியாக ஏற்ற முடியாதவர்கள், எப்படி நாட்டை ஆள்வார்கள்? தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக மூவர்ணக் கொடியை வெறுத்து வருபவர்களால், இன்று தேசியக் கொடிக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி