ஆப்நகரம்

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை வாங்கப் போகும் காங்கிரஸ் எம்.பி..!- யார் தெரியுமா..?

எழுத்திலும் பேச்சிலும் ஆளுமை கொண்டவர் சசி தரூர்.

Samayam Tamil 11 Aug 2022, 10:36 pm

ஹைலைட்ஸ்:

  • வாழ்த்துகள் குவிந்து வருகிறது
  • நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Shashi Tharoor
காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது

பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் உள்பட பல இந்தியர்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிதரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது.


23 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் அவையில் தூதராக பணியாற்றிய சசிதரூர், காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார் . தனக்கு செவாலியே விருது கிடைத்தது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சசிதரூர், பிரான்சு உடனான உறவை போற்றும் நம் மொழியை நேசிக்கும் கலாச்சாரத்தை போற்றும் ஒருவனாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டதற்கு எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .

சசிதரூர் எம்பி ஏற்கனவே ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி