ஆப்நகரம்

பணமதிப்பு இரண்டாம் ஆண்டு: கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் போராட்டம்

பணமதிப்பிழப்பின் இரண்டாம் ஆண்டை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தேசியளவில் போராட்டம் நடத்தவுள்ளது.

Samayam Tamil 8 Nov 2018, 10:05 am
இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ள நிலையில், இந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்,
Samayam Tamil congress-cover-pic
பணமதிப்பிழப்பு நாளை கருப்பு தினமாக அனுசரித்து காங்கிர்ஸ் போராட்டம்


கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி இரவில் மக்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். அதை தொடர்ந்து புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுக்களை மத்திய அரசு வெளியிட்டது.

இந்த பணமதிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு இருந்தாலும், பல தரப்பு மக்கள் இன்றளவும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பணம் மதிப்பிழக்கத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை நாட்டின் கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி