ஆப்நகரம்

தலைசிறந்த ஆளுமைகளை நாட்டுக்கு தந்துள்ளது காங்கிரஸ்- ஆர்எஸ்எஸ் தலைவர்

காங்கிரஸ் வடிவில் வளர்ந்த சுதந்திர இயக்கம் நாட்டுக்கு பல தலைசிறந்த தலைவர்களை அளித்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Sep 2018, 3:16 am
காங்கிரஸ் வடிவில் வளர்ந்த சுதந்திர இயக்கம் நாட்டுக்கு பல தலைசிறந்த தலைவர்களை அளித்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mohan-bhagwat-congress
காங்கிரஸுக்கு பாராட்டு தெரிவித்து ஆர்எஸ்எஸ் தலைவர் உரை


எதிர்கால இந்தியாவுக்கான செயல்பாடுகளை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் மூன்று நாள் கருத்தரம் டெல்லியில் இன்று தொடங்கியது.

இதற்காக நடைபெற்ற விழாவில் இந்தி திரையுலகின் நடிகர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து, மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் வடிவத்தில் வளர்ந்த சுதந்திர இயக்கம் எதற்கும் தியாகம் செய்யக்கூடிய மனப்பான்மை பெற்ற தலைவர்களை நாட்டுக்கு அளித்தது என்று தெரிவித்தார்.

சுதந்திர வேட்கையினை பறைசாற்றும் விதமாக இயங்கிய அந்த இயக்கம், சாதாரண மக்களை சுதந்திர போராட்டத்தில் இணைப்பதற்கு ஊக்குவித்தது என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸில் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் பாஜக மற்றும் அர்.எஸ்.எஸ் மீடு கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசி வரும் நிலையில், மோகன் பகவத்தின் இந்த பேச்சு இந்திய அரசியல் களத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி