ஆப்நகரம்

கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகராக ரமேஷ் குமார் தேர்வு

கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 25 May 2018, 1:11 pm
பெங்களூரு : கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil ramesh kumar


கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 12ம் தேதி நடைப்பெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை 15ம் தேதி நடைப்பெற்றது. இதில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதசார்பற்ற காங்கிரஸ் 38, மற்றவை 2 தொகுதிகளைப்பிடித்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எட்டியூரப்பா ராஜினாமா:
104 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார். பஜகவின் எட்டியூரப்பா மே16ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக பொறுப்பேற்றதற்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், மஜத சார்பாக வழக்கு போடப்பட்டது. இதையடுத்து எட்டியுரப்பா வெறும் 3 நாளில் முதல்வர் பதவியை மே 19 ல் பெரும்பான்மை நிரூபிக்கும் முன்னரே ராஜினாமா செய்தார்.

ரமேஷ் குமார் சபாநாயகர் :
மஜத + காங்கிரஸ் கூட்டணியில் மஜத சேர்ந்த முதல்வர் குமார சாமி தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டுள்ளது. இன்று அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க உள்ளார்.

இந்நிலையில் அவைப் தலைவராக காங்கிரஸின் கே.ஆர் ரமேஷ் குமார் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக ரமேஷ் குமார் குடும்ப மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்