ஆப்நகரம்

கொரோனா: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 'கை'க்கொடுக்கும் காங்கிரஸ்!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் 100 ரயில்களுக்கான பவ கோடி ரூபாய் பயணக் கட்டணத்தை காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில அரசுகள் ரயில்வே அமைச்சகத்துக்கு அளித்துள்ளன.

Samayam Tamil 15 May 2020, 9:39 pm
பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil congress


கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துதவிக்கும் தொழிலாளர்கள் ரயில்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார்.

அவரின் இந்தக் கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் ஏற்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களிலிருந்து சிறப்பு ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயணச் செலவை அந்தந்த மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ளும் என்று சோனியா காந்தி அறிவித்தார்.

ஏழைகளின் பயணங்களும், பட்டினிகளும் ஓய்வதில்லை

அதன்படி பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இதுவரை இயக்கப்பட்டுள்ள சுமார் 100 சிறப்பு ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை செலுத்தியுள்ளன.

பஞ்சாப் அரசு, தமது மாநிலத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக, 60 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை தாமே செலுத்துவதற்காக 35 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. தினமும் 13 ரயில்கள் வீதம் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு ரயில்களுக்கான பயணக் கட்டணமாக இதுநாள்வரை 6 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்; அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் - என்ன செய்யப் போகிறோம்?

இதேபோன்று, ராஜஸ்தான் மாநில அரசு இதற்காக 7.5 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. அந்த மாநிலத்திலிருந்து இதுநாள்வரை இயக்கப்பட்டுள்ள 22 ரயில்கள் மூலம் மொத்தம் 2.15 லட்சம் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர்.

இது தவிர, வெளிமாநில மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பேருந்துகள் மூலமாக அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க, 12 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ராஜஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவங்க செய்றது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு: ரயில்வே அமைச்சர் புலம்பல்!!

காங்கிரஸ் ஆட்சிபுரியும் யூனியன் பிரதேசமாக புதுச்சேரியிலிருந்து சுமார் 500 தொழிலாளர்கள் கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பீகார், மேற்கு வங்க ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்காக, புதுச்சேரி மாநில அரசு 40 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக, சத்தீஸ்கர் மாநில அரசு 21 சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில் இரண்டு ரயில்கள் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி