ஆப்நகரம்

இன்னும் எத்தனை பேரை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப உத்தேசம்? -மோடி மீது காங்கிரஸ் காட்டம்!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை என்ற பெயரில், இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல நீங்கள் காரணமாக இருக்க போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

Samayam Tamil 3 Aug 2020, 4:28 pm
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் இன்று (ஆகஸ்ட் 3) முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) வரை நடைபெறுகின்றன. இதன் முக்கிய அம்சமாக, கோயில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெறவுள்ளது.
Samayam Tamil vijay singh


இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டவிருக்கிறார். இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இந்த விழா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை மேற்கொள்ள தற்போது தீர்மானிக்கப்பட்டு நாள்(ஆகஸ்ட் 5), பூமி பூஜை செய்வதற்கு உகந்த நாள் இல்லை என்று மடாதிபதிகள் தெரிவித்துவிட்டனர். ஆனாலும், பிரதமர் மோடிக்கு பொருத்தமான நாள் என்பதால் இந்த தினத்தை தேர்வு செய்துள்ளனர்.

ராமர் கோயில் பூமி பூஜை... கலர் கலராக மின்னும் அயோத்தி

அதேசமயம், அயோத்தியில் கோயிலுடன் தொடர்புடைய பலரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, பூமி பூஜைக்கான தொடக்க விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். எனவே இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேச வேண்டும்.

இல்லையெனில், ராமர் கோயில் பூமி பூஜையை நடத்தி இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல நீங்கள் காரணமாக இருக்க போகிறீர்கள், சனாதன தர்மத்தை மீறி எப்படி நீங்கள் செயல்படுவீர்கள், அப்படி என்ன உங்களுக்கு நிர்பந்தம்? என மோடியிடம் பல கேள்விகள் கேட்க வேண்டிவரும் என்று திக்விஜய் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி