ஆப்நகரம்

ஓட்டுக்காக மட்டுமே வேளாண் கடன் தள்ளுபடியை காங்கிரஸ் அறிவிக்கிறது: மோடி

வெறும் வாக்குக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிவருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Feb 2019, 4:28 pm
வெறும் வாக்குக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிவருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil modi adayar


காஷ்மீரில் 3,500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், ‘காங்கிரஸ் கட்சி போகும் இடமெல்லாம் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி வருகிறது. தேர்தலில் ஜெயிப்பதற்காக மட்டுமே காங்கிரஸ் அவ்வாறு கூறி வருகிறது.இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது 6 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், வெறும் 52 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. இது நேரடி விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அல்ல. இடைத்தரகர்களுக்குத் தான் சென்றடைந்துள்ளது.

தற்போது பாஜக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பணம், நேரடியாக மக்களின் வங்கிக்கணக்கிற்கே சென்று சேரும் வகையில், ஜன் தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பெருமளவு பயன்படுகின்றனர். இடைத்தரகர்கள் என்ற பேச்சுக்கே இங்கு இடம் இல்லை. இந்திய மக்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசத்தில் வாழ்கின்றனர். நீதி இல்லாத சூழலில் தான் தான் அவர்கள் அங்குள்ளனர்’.

இவ்வாறு மோடி பேசினார்

அடுத்த செய்தி