ஆப்நகரம்

கடலோர கர்நாடகாவில் சறுக்கிய காங்கிரஸ்.. பாஜகவுக்கு கைகொடுத்த பஜ்ரங் தள்.. பரபர கருத்துக்கணிப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை கடலோரப் பகுதிகள் தடுக்கும் என ஏபிபி நியூஸ் + சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 10 May 2023, 8:57 pm
பெங்களூர்: கர்நாடகாவில் கடலோர பிராந்தியங்களில் காங்கிரஸ் பெரும் சறுக்கலை எதிர்கொண்டுள்ளது. அதே சமயத்தில், அங்கு பாஜக அடித்து துவம்சம் செய்து முன்னுக்கு வருகிறது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது சிக்கலாகும் என வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஏபிபி நியூஸ் + சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
Samayam Tamil bjp flag


ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் என்றால் அது சந்தேகமே இல்லாமல் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் தேர்தல் என்பதுடன், அசுர வளர்ச்சியுடன் உயர்ந்து நிற்கும் பாஜகவை, காங்கிரஸால் வீழ்த்த முடியுமா என்பதை அறியும் தேர்தலாகவும் இது கருதப்படுகிறது. இதனால் இயற்கையாகவே கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகமானது.

மொத்தம் 224 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டதால் மும்முனை போட்டி அங்கு நிலவியது. ஆரம்பம் முதலாகவே, கர்நாடகாவில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அதே சமயத்தில், பாஜகவுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. 113 என்ற மேஜிக் நம்பரை யார் பெறுகிறார்களோ, அவர்கள்தான் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியும்.
"மாஸ்டர் ஸ்ட்ரோக்".. காங்கிரஸை வீழ்த்த பாஜக எடுக்கும் கடைசி "அஸ்திரம்".. பற்றி எரியும் கர்நாடகா தேர்தல் களம்!
இந்நிலையில், ஏபிபி நியூஸ் + சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 100 - 112 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு பெரும்பான்மை பலம் கிடைப்பது சிரமம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், கடலோர கர்நாடகாவில் அக்கட்சிக்கு கிடைத்துள்ள அடிதான்.

பெரும்பாலும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் நிறைந்துள்ள கடலோர கர்நாடகாவில், இயற்கையாகவே பாஜகவுக்கு ஆதரவு அதிகம். நிலைமை இப்படி இருக்கும் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தள அமைப்பை தடை செய்வோம் என காங்கிரஸ் அறிவித்தது இப்பகுதியில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடலோர கர்நாடகாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் வெறும் 2 -6 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றும் என்றும், 15 முதல் 19 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் எனவும் ஏபிபி நியூஸ் + சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடலோர கர்நாடகாவில் 49 சதவீத வாக்குகளை பாஜக பெறும் என்பது உறுதியாகி உள்ளது. இங்கு காங்கிரஸ் சந்திக்கும் பெரும் சறுக்கல்தான், அக்கட்சி ஆட்சி அரியணை ஏறுவதில் இருந்து தடுக்கும் முக்கிய காரணியாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி