ஆப்நகரம்

தொண்டர்களே சூறையாடிய காங்கிரஸ் அலுவலகம்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கட்சி அலுவகத்தை துவம்சம் செய்தனர்.

Samayam Tamil 16 Apr 2018, 2:46 pm
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கட்சி அலுவகத்தை துவம்சம் செய்தனர்.
Samayam Tamil Da5HsJtX4AADnZg


224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

இத்தேர்தலுக்கான 218 தொகுதிகளுக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்துள்ளது. முதல்வர் சித்தராமையா மீண்டும் சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில், இந்த வேட்பாளர் பட்டியலில் தொகுதி ஒதுக்கீட்டு குறித்து மாண்டியா மாவட்டத் தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக, மாண்டியாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் கும்பலாகப் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர்.

அடுத்த செய்தி