ஆப்நகரம்

”நீர் சேமிப்பை அறிவுறுத்தும் பல கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் உள்ளன”- மன் கீ பாத் உரையில் மோடி

நீர் சேமிப்பிற்காக நாட்டு மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி தனது ’மன் கி பாத்’ உரையில் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 29 Apr 2018, 5:26 pm
நீர் சேமிப்பிற்காக நாட்டு மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி தனது ’மன் கி பாத்’ உரையில் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil narendra-modi-pmo-man-ki-bhat
நீரை சேமியுங்கள்- மன் கீ பாத்தில் மோடி அறிவுரை


பிரதமர் நரேந்திர மோடியின் ’மன் கீ பாத்’ வானொலி நிகழ்ச்சி 43வது மாதமாக இன்று ஒலிப்பரப்பானது. அப்போது பேசிய மோடி, கோடைக்காலத்தில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது, அதனால் நீர் சேமிப்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாடுகளில் உள்ள வழிப்பாட்டு தளங்களில் நீரை சேமிப்பதற்கான பல தகவல்கள் உள்ளதாக பேசினார். மேலும் நதிநீர் சேமிப்பிற்காக ரூ. 32,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளதாக தனது உரையில் தெரிவித்தார்.

பள்ளி தேர்வுகளை முடித்துவிட்டு விடுமுறையில் இருக்கும் இளைய தலைமுறையினர், தூய்மை இந்தியா திட்டத்திற்காக பயிற்சி பெற்று சேவை செய்ய வேண்டும். அப்படி சேவை பணியில் ஈடுபடுபவர்களுக்கு அரசு நற்சான்றிதழ் வழகும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

உலகளவில் விரைவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பதன் மூலம் மற்றவர்களின் பசி, தாகம் குறித்த புரிதல் ஏற்படுகிறது என்றார்.

அடுத்த செய்தி