ஆப்நகரம்

சித்தூரில் கோர விபத்து: பிரேக் பிடிக்காத கண்டெய்னர் மோதி 10 பேர் பலி..!

ஆந்திர மாநிலம் சித்துரில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் சாலையில் சென்ற வாகனங்கள் மீது ரியாத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Samayam Tamil 8 Nov 2019, 7:57 pm
ஆந்திர மாநிலம், பெங்களூரு - திருப்பதி சாலையில் அதி வேகமாக சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடியது. மேலும் லாரியின் பிரேக் பழுதடைந்த காரணத்தினால் ஓட்டுனரால் வாகனத்தை நிறுத்த இயலவில்லை.
Samayam Tamil சித்தூரில் கோர விபத்து: பிரேக் பிடிக்காத கண்டெய்னர் மோதி 10 பேர் பலி..!


இதையடுத்து அந்த கண்டெய்னர், சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பலமாக மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்புக் கோருகிறது சிவசேனா!!

மேலும் படுகாயமடைந்து உயிருக்காக போராடிய 4 பேர் மீட்கப்பட்டு சித்துர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் தீ அணைப்பு வீரர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி