ஆப்நகரம்

அதிகரிக்கும் சகிப்புத்தன்மை இல்லாமை; ஆபத்தான நிலையில் சுதந்திரம் - எச்சரிக்கும் உச்சநீதிமன்றம்!

நாட்டில் அதிகரிக்கும் சகிப்புத்தன்மை இல்லாத சூழல், சுதந்திர நிலைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 11 Apr 2019, 8:44 pm
மேற்குவங்க மாநிலத்தில் அரசியல் சூழலை விமர்சிக்கும் வகையில் “போபிஷையோடர் பூத்” என்ற படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
Samayam Tamil SC


இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் சந்தரசுத், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையில், அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு.

கலை சுதந்திரத்தில், அவர்களின் கருத்துகளை வெளியிட யாரும் தடை விதிக்க முடியாது. பிறரின் சுதந்திர, நம்பிக்கை, சிந்தனை, கருத்து வெளிப்பாடு ஆகியவற்றை நசுக்கும் செயலில் ஈடுபட சட்டம் எந்த வகையிலும் அனுமதிக்காது.

இது மக்களின் அடிப்படை சுதந்திரத்தை பாதிக்கும் செயல். அதாவது சகிப்புத்தன்மை இல்லாத சூழலை காட்டுகிறது. அரசு எழுதப்பட்ட சட்ட திட்டங்களின் படி, மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டும்.

மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயலில் எந்தவொரு மாநில அரசும் ஈடுபடக் கூடாது. மக்களுக்காக வரையறுக்கப்பட்டது தான் சுதந்திரம். இது எந்த வகையிலும் அதிகாரத்தின் கையில் சிக்கி விடக் கூடாது.

அரசு அதிகாரம் என்பது மக்களால் அளிக்கப்பட்டது. இதனை முறைப்பட பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி