ஆப்நகரம்

போராடிய விவசாயிகளின் ஆடைகளை களையச் செய்த போலீஸ்; அவமானத்தில் தலைகுனிவு!

விவசாயிகளின் ஆடையை களையச் செய்து, போலீசார் அவமானத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 4 Oct 2017, 5:16 pm
பண்டல்காண்ட்: விவசாயிகளின் ஆடையை களையச் செய்து, போலீசார் அவமானத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil cops forced to strip the farmers after protest
போராடிய விவசாயிகளின் ஆடைகளை களையச் செய்த போலீஸ்; அவமானத்தில் தலைகுனிவு!


மத்தியப் பிரதேச மாநிலம் பண்டல்காண்டில் மாவட்ட நிர்வாக அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை காங்கிரஸ் கட்சி தான் தூண்டிவிட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக கூறப்பட்ட நிலையில், விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

மேலும் கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். இதையடுத்து அவர்களை கைது செய்து, ஆடைகளை களையச் செய்து, அவமானப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் செல்லவிருப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம் விவசாயிகள் கற்களை வீசி தங்களைக் காயப்படுத்தியதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

உணவு கொடுக்கும் விவசாயிகள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cops forced to strip the farmers after protest.

அடுத்த செய்தி