ஆப்நகரம்

நல்லா யூஸ் பண்ணிட்டு இப்படி செஞ்சிட்டாங்களே போலீசார் - கதறும் விகாஸ் துபே மனைவி!

பிரபல கேங்ஸ்டர் விகாஸ் துபே செய்தியாளர்களிடம் பல்வேறு பரபரப்பான விஷயங்களை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jul 2020, 1:59 pm
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விகாஸ் துபே குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. லக்னோவில் உள்ள கிருஷ்ண நகர் இல்லத்தில் இருந்து விகாஸ் துபேவின் மனைவி ரிச்சா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிகாலை 2 மணி இருக்கும். எனது கணவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் என்னை லக்னோ வீட்டை விட்டு தப்பிச் சென்றுவிடு. பிக்ருவில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனது நண்பரின் இடத்தில் அடைக்கலம் புகுந்துள்ளேன். போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கிறேன் என்றார். அதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள். இதையடுத்து மீடியாக்களில் வெளிவரும் செய்திகள் மூலம் தான் கணவரைப் பற்றி தெரிந்து கொண்டேன் என்றார்.
Samayam Tamil Vikas Dubey Wife Richa


ஆனால் தான் எந்த இடத்தில் பதுங்கியிருந்தார் என்று ரிச்சா தெரிவிக்கவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் பிக்ரு இல்லத்தில் அவ்வப்போது போலீசார் வந்து எனது கணவருடன் மதிய உணவும், இரவு உணவும் சாப்பிட்டுச் சென்றனர். நள்ளிரவு வரை கூட தங்கியுள்ளனர். எனது கணவரை நன்றாக பயன்படுத்திக் கொண்டு இப்படி கொன்றுவிட்டனர்.

EIA 2020: சூழலியல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன? என்ன பிரச்சினை?

சட்டத்தின் மீதும், நீதித்துறை மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனது கணவர் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். தனது கணவரின் மற்றொரு முகம் குறித்து பேசிய ரிச்சா, விகாஸ் துபே குற்றவாளியாக இருக்கலாம். ஆனால் மிகவும் அக்கறை கொண்ட கணவர். நல்ல தந்தை. எங்கள் இரு குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டிருந்தார்.

ஒவ்வொரு மாதமும் செலவிற்காக ரூ.40,000 தந்துவிடுவார். எனது மூத்த மகன் சாந்தனு ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகன் ஆகாஷ் 12ஆம் வகுப்பில் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். எனது கணவர் இறந்துவிட்டதாக அனைவரும் சொல்லலாம். ஆனால் அவர் உயிருடன் இருப்பதாகவே நான் கருதுகிறேன். முதன்முதலில் 1990ஆம் ஆண்டு விகாஸ் துபேவை சந்தித்தேன்.

எனது சகோதரர் ராஜூ நிகாமிற்கு நல்ல நண்பராக இருந்தார். அதன்பிறகு தான் திருமணம் செய்து கொண்டோம். கிராமத்தில் முக்கியமான நபராக பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக்கூடியவராக இருந்தார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்த நிலையில், 2004ஆம் ஆண்டு லக்னோவில் வீடு ஒன்றை கட்ட தீர்மானித்தோம்.

கொரோனாவை ஓரங்கட்டிய பருவமழை - இத்தனை மாநிலங்களை புரட்டி போட்டதால் கவலை!

அவரை விட்டு எனது குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறேன். நன்றாக படித்தால் தான் நல்ல வாழ்க்கை அமையும் என்று அவர் கருதுவார். துபே எப்போதும் தனது பெற்றோரின் ஆசிர்வாதத்தை பெற்று வந்ததாக தெரிவித்தார். இவ்வளவு அமைதியாக பேசினாலும் விகாஸ் துபே இறுதிச் சடங்கு கங்கை நதிக்கரையில் நடந்த போது அவரது வேறு முகத்தை மீடியாக்கள் முன்பு வெளிக்காட்டினார். அப்போது பேசுகையில், ”தேவைப்பட்டால் துப்பாக்கி எடுக்கக் கூட தயங்க மாட்டேன்” என்று ரிச்சா பரபரப்பை கிளப்பினார்.

அடுத்த செய்தி