ஆப்நகரம்

கொரோனா, பொதுமுடக்கம்... வாழ்வாதாரத்துக்கு மாற்று வழி தேடும் பாலியல் தொழிலாளர்கள்!

கொரோனா தாக்கத்தின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்களில் 99 சதவீதம் பேர், மாற்று வழி கிடைத்தால் தங்களின் வாழ்வை பாதையை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பதாக கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 19 Sep 2020, 12:12 am
கொரோனா வைரஸ் தொற்று, உலகெங்கும் லட்சக்கணக்கானோரின் உயிரை குடித்து வருகிறதென்றால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்துக்கு உலை வைத்துள்ளது. இதற்கு பாலியல் தொழிலாளர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
Samayam Tamil sex workers


கொரோனா பொதுமுடக்கத்தில் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை என்புது குறித்து, ஆஷா கேர் டிரஸ்ட் எனும் தன்னார்வ நிறுவனம், பாலியல் தொழிலாளர்களிடம் கள ஆய்வு நடத்தியது.

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் அமைந்துள்ள இந்தியாவின் மூன்றாவது பெரிய சிவப்பு விளக்கு பகுதியான புத்வார் பெத்தில் வசிக்கும் 300 பாலியல் தொழிலாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் பல அதிர்ச்சிகரமான மற்றும் பரிதாபகரமான பல விஷயங்கள் தெரிய வந்துள்ளது.

தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவசாயிகள்; மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சிகர புள்ளிவிவரம்!

கொரோனா காலத்தில் பாலியல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த தொழிலை நம்பியுள்ள பெண்களில் 85 சதவீதம் பேர் கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவற்றில் 98 சதவீதம் பேர், தங்களை இத்தொழிலில் ஈடுபடுத்திய உரிமையாளர்கள், மேலாளர்கள் உள்ளிட்டோரிடமே கடன் வாங்க லேண்டிய அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர். கடனை திரும்ப செலுத்த முடியாதபோது, பணம் கொடுத்தவர்கள் இவர்களை தங்களின் இச்சைக்காக பயன்படுத்தி கொள்ளும் கொடுமையும் நடந்து வருகிறது.

92. 7 சதவீத பாலியல் தொழிலாளர்கள் மீண்டும் இந்த தொழிலுக்கு திரும்ப அச்சப்படுகிறது. அதேசமயம் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் திகைத்துள்ளனர்.

ஒருபுறம் நீட் தேர்வால் சிதையும் மருத்துவக் கணவுகள்; மறுபுறம் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவு!

68 சதவீதம் பேர், வரும் நாட்களில் தங்களது தொழில் மீண்டும் சூடுபிடிக்கும் என்று நம்புகின்றனர். அதேசமயம், 99 சதவீதம் பாலியல் தொழிலாளர்கள் நல்ல வாய்ப்பு கிடைத்தால், தங்களது வாழ்வாதாரத்துக்காக வேறு தொழில் புரிய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

"எனவே பாலியல் தொழிலை ஒழிக்க கொரோனா காலத்தை சிறந்த வாய்ப்பாக கருதி, பாலியல் தொழிலாளர்கள் தங்களது வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்க, அவர்களின் வாழ்வாதாரத்துக்கான மாற்று வழிகளை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என்று ஆஷா கேர் டிரஸ்ட் அமைப்பின் தலைவர் ஷீலா ஷெட்டி வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி