ஆப்நகரம்

கொரோனா வார்டில் நோயாளி மரணம்... மருத்துவர்களின் அலட்சியம் காரணமா?

அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர், திடீரென மருத்துவமனையிலேயே திடீரென இறந்த சம்பவம், நெல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள், ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே அவர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Samayam Tamil 30 Jul 2020, 9:25 pm
ஆந்திர மாநிலம், நெல்லூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டருந்த நபர் ஒருவர் மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோரின் அலட்சியம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil corona patient


கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை மிகவும் நலிவடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை பணியில் இருந்த மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோர் சரியாக கவனிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இந்த நிலையில், அவசர தேவைக்காக பாத்ரூம் சென்ற அவர் அங்கேயே மயங்கி விழுந்து பரிதாபமாக மரணமடைந்தார்.

அங்கிருந்த ஊழியர்கள் அவர் மயங்கி சரிவதை கண்டு, அவரை தூக்கி படுக்கையில் படுக்க வைத்தனர். அவருடைய உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்த விட்டதாக அறிவித்தனர்.

நாடு முழுக்க நாலு மாசத்துல செய்யப்பட்டுள்ள கொரோனா பரிசோதனைகள் இவ்வளவுதான்!!

இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுகின்றன. இதன் காரணமாக, கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்ல தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி