ஆப்நகரம்

india 2nd: கொரோனா விவகாரத்தில் இந்தியாவின் கவலையளிக்கும் நிலை இதுதான்...

இந்தியாவின் கொரோனா பாதிப்பு, தீவிர நோயாளிகள், உயிரிழப்புகள் ஆகியவற்றால் இந்தியா உலக அளவில் வேகமாக முன்னேறி வருகிறது.

Samayam Tamil 2 Jun 2020, 7:30 am
கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் இந்தியா நாளுக்கு நாள் கவலையளிக்கும் விதமாக முன்னேறி வருகிறது. சர்வதேசப் பட்டியலின்படி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 7ஆவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
Samayam Tamil corona virus status and details of india
india 2nd: கொரோனா விவகாரத்தில் இந்தியாவின் கவலையளிக்கும் நிலை இதுதான்...


இந்த 7ஆவது இடம் என்பது வெறுமனே பாதிப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே சொல்லப்படுகிறது. ஆனால், கவனிக்க வேண்டியவை என்று பார்த்தால் இந்தியா சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தையும் பிடிக்கிறது என்பது கவலையளிப்பதாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 90 ஆயிரத்து 535 . இதில் குணமடைந்தவர்களும் அடங்குவர். இந்த எண்ணிக்கையின்படி உலக அளவில் 7ஆவது இடம் வகிக்கும் இந்தியா, குணமடைந்தவர்களைத் தவிர்த்த மீதமிருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையின்படிப் பார்த்தால் உலக அளவில் நான்காவது இடம் வகிக்கிறது.


அதே போல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை விகிதம் முதல் 6 நாடுகளைக் காட்டிலும் மிக மிகக் குறைவாக உள்ளது. அதாவது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கையும் ஏறக்குறைய சமமாக உள்ளது.

இந்நிலையில், மேலும் ஆச்சரியமளிக்கும் செய்தி என்னவெனில், மொத்தம் இருக்கும் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கையில், பாதிப்பு தீவிரமாகி கவலைக்கிடமான நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8944 ஆக உள்ளது. இது உலக அளவில் இரண்டாவது இடம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும் (16,949 தீவிர பாதிப்புகள்) , மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (8318 தீவிர பாதிப்புகள்) உள்ளன.



சர்வதேசப் பட்டியலில் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது இந்தியா. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இந்தியாவில் முதல் 50 ஆயிரம் பாதிப்புகள் கண்டறியப்பட 90 நாட்கள் ஆகின. ஆனால், அடுத்த 50,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது வெறும் 7 நாட்கள்தான் என்பது பரவலின் தீவிரத்தை உணர்த்துகிறது.

தளர்வுகள் மூலம் நிலைமை சீராகி வருவதாக மக்களுக்கு எண்ணத்தை ஏற்படுத்த அரசு முயற்சித்து வந்தாலும், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து செயல்பட வேண்டியது இந்த சமயத்தில் அவசியம்.

அடுத்த செய்தி