ஆப்நகரம்

அச்சச்சோ கொரோனா..! முடங்கிப்போன ஐதராபாத் சிட்டி... உயரும் எண்ணிக்கை...

இத்தாலி சென்று திரும்பிய ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேலும் இரண்டு பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2020, 8:46 pm
கொரோனா பரிசோதனைக்காக ஹைதராபாத் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் காந்தி அரசு மருத்துவமனையில் குவிகின்றனர். அதன் எதிரொலியாக வீட்டில் இருந்தே வேலை செய்ய சாப்ட்வேர் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Samayam Tamil கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிப்போன ஐதராபாத் சிட்டி


ஐதராபாத்தில் உள்ள மைண்ட் ஸ்பேஸ் வளாகத்தில் செயல்படும் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் 24 வயதான பெண் ஊழியர் ஒருவர் இத்தாலியில் நடைபெற்ற திருமணம் ஒன்றிற்கு சென்று கலந்து கொண்ட பின் சில நாட்களுக்கு முன் நாடு திரும்பினார்.


ஐதராபாத்துக்கு வந்தடைந்த அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். அதையடுத்து அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த காரணத்தால் அவருக்கு காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ சோதனை நடத்தியபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது.
எனவே அவர் வேலை பார்த்து வந்த மைண்ட் ஸ்பேஸ் வளாகத்தில் செயல்படும் அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறும், அலுவலகத்திற்கு நிலைமை சீராகும் வரை வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: மத்திய அரசு அறிவுரை!

ஐதராபாத்தில் இதுவரை 47 பேர் கொரோனா அறிகுறிகளுடன் காந்தி அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 45 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று நிரூபணம் ஆகியுள்ளது. இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களோடு மொத்தம் மூன்று பேர் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மைண்ட் ஸ்பேஸ் நிறுவனத்தில் செயல்படும் அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களையும் தற்காலிகமாக காலி செய்ய வைக்கும் முயற்சியில் தெலுங்கானா மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

மேலும், தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஒருவரை ஒருவர் தொட்டுப் பேச வேண்டாம் என்றும், முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி