ஆப்நகரம்

கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இருநூறை தாண்டியுள்ளது.

Samayam Tamil 20 Mar 2020, 9:13 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு இன்று (மார்ச் 20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Samayam Tamil கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியது


கடந்த இரண்டு மாதங்களாக, கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் இன்றுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ளது. இதில் சீனா, இத்தாலி ஆகிய நாடுகளில் மட்டும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோரப்பசிக்கு இரையாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தன் வேலையை காட்ட தொடங்கியுள்ளது. டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் நான்கு பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா ஆய்வு: 18 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

சீனா, இத்தாலியை போன்று இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம் எடுப்பதை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் முக்கிய நடவடிக்கையாக, நாடு முழுவதும் நாளை மறுநாள் (மார்ச் 22) பொதுமக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வாறு 'மக்கள் ஊரடங்கு' கடைபிடிக்க வேண்டும்?

இவர்களில் 32 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாவர். இவர்களை தவிர்த்து, மகாராஷ்டிரம் - 48, கேரளா -28, உத்தரப் பிரதேசம் -22, கர்நாடகம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 16 பேர் என மொத்தம் 191 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 23 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி