ஆப்நகரம்

கொரோனா பாதிப்பு: இந்தியாவின் தற்போதைய நிலவரம் இதுதான்!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Apr 2020, 7:33 pm
இந்திய அளவில் புதன்கிழமை மாலை நிலவரப்படி கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக இருந்தது.
Samayam Tamil corona india


இந்த நிலையில் நேற்று (ஏப்.1) மாலை 4:30 மணி தொடங்கி, இன்று (ஏப்.2) மாலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தேசிய அளவில் புதிதாக 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 110 பேரும் அடங்குவர். இதையடுத்து, தேசிய அளவில் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது.

வீட்டுக்குள்ளேயே இருங்க மக்களே: ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது 335 பேரும், கேரளாவில் 265 பேரும், தமிழகத்தில் 234 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இதுநாள்வரை மொத்தம் 50 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 13 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

லிட்டர் கணக்கில் பசு மூத்திரம் குடிக்கும் குஜராத் மக்கள்; ஏன்?

அதேசமயம், பல்வேறு மாநிலங்களில் இதுநாள்வரை மொத்தம் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 150 பேர் குணமடைந்துள்ளனர் என்பது மட்டுமே தற்போதைய இக்கட்டமான சூழலில் ஒரே ஆறுதலான தகவலாக உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட 9,000 பேர்: தில்லியில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் பங்கேற்றவர்கள், அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்த அமைப்பின் நிர்வாகிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று மொத்தம் 9,000 பேர் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளிலோ, வீடுகளிலோ தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று. இவர்களில், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் 1,306 பேர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி