ஆப்நகரம்

ரயில்கள் மூலம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பரவும் கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 22 Mar 2020, 9:31 am
இந்தியாவில் நேற்று இரவு நிலவரப்படி 315 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டினர் 39 பேரும், உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் 244 பேரும் ஆவர்.
Samayam Tamil ரயில்கள் மூலம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பரவும் கொரோனா


மொத்தம் 22 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்த இடத்தில் நமது அண்டை மாநிலமான கேரளா உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக உள்ளது. மேலும் நமது மற்ற அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 15 பேரும், ஆந்திராவில் 3 பேரும், தெலங்கானாவில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா: இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் பலி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் தமிழ்நாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ள்ன. அத்தியாவசிய தேவை காரணமாக வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மக்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் ஆகியவை இயங்காத சூழலில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

நீண்ட பயணங்களைத் தவிர்க்குமாறு தொடர்ந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சமயத்தில் ரயில் பயணங்கள் பாதுகாப்பானது அல்ல எனத் தெரிவித்துள்ளது. இன்று மட்டும் 3700க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் பயணித்த 180க்கும் மேற்பட்டவர்களை கண்காணித்து வருகின்றனர்.

அலட்சியம் ஆபத்தின் ஆரம்பம்; மக்கள் ஊரடங்கி விட்டால் போதுமா?

டெல்லியிலிருந்து ஆந்திரா வந்த சம்பார்க் க்ரந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர்களுடன் பயணித்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

அதேபோல் மும்பையிலிருந்து ஜபால் நகர் சென்ற கோடான் எக்ஸ்பிரஸில் பயணித்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த ரயிலில் பயணித்த மற்ற பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி