ஆப்நகரம்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் எத்தனை பேருக்குக் கொரோனா?

கடந்த 24மணி நேர பாதிப்புக்குப் பிறகு, இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ​24,506 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 775 ஆகவும் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 25 Apr 2020, 10:59 am
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தடுப்பு மருந்தோ அல்லது குணப்படுத்தும் மருந்தோ இல்லாத நிலையில், தற்காப்பு மட்டுமே தற்போதைக்கு ஒரே மருந்தாக உள்ளது.
Samayam Tamil corona up and down


இந்நிலையில் நாள் தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கடுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. முதன்முதலாக , மார்ச் மாதத்தின் பிற்பாதியில் தீவிரமெடுக்கத் தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்று வரையிலும் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

25.04.2020 ஆம் தேதி காலை 10 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 57 பேர் உயிரிழந்துள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 775 ஆகவும் உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி