ஆப்நகரம்

கொரோனா வைரஸ்: ஒரே மாதத்தில் 12 ஆயிரம் பேர் பலி - கட்டுக்குள் கொண்டு வர என்ன வழி?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எந்தளவிற்கு இருக்கிறது, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன, பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவற்றை இங்கே காணலாம்.

Samayam Tamil 1 Jul 2020, 8:13 am
இந்தியாவில் 5.85 லட்சம் பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 17,412ஆக அதிகரித்துள்ளது. தொடர் பாதிப்பால் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை நெருங்கும் அளவிற்கு இந்தியா மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
Samayam Tamil Coronavirus


LIVE UPDATES:

* கோவாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் - கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

* டெல்லியில் புதிதாக 2,199 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தலைநகரின் மொத்த பாதிப்பு 87,360ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,742ஆக உயர்ந்துள்ளது.

* அசாமில் புதிய உச்சமாக ஒரே நாளில் 613 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 8,000ஐ தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பால் கிராம பஞ்சாயத்து தேர்தல்களை தற்போதைக்கு நடத்தும் திட்டமில்லை. வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேர்தல் நடத்த மாநில அரசு பரிசீலிக்கும்
ஹரியானா முதலமைச்சர் அலுவலகம்

* ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ”கோவாக்சின்” என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை ஐசிஎம்ஆர் மற்றும் என்ஐவி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கியுள்ளது. இந்த மருந்தை மனிதர்கள் மீது முதல் மற்றும் இரண்டாம் பரிசோதனைகளை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

* டெல்லியில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் மிகப்பெரிய எண்ணிக்கையில் படுக்கைகள் காலியாக இருக்கின்றன. மாநில அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது - மணிஷ் சிசோடியா, டெல்லி துணை முதல்வர்

* இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு 4 செவிலியர்கள் தன்னுடன் நேரலையில் உரையாட இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இவர்கள் கோவிட்-19 பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில் தங்கள் பணியை மிகவும் தீவிரமாக மேற்கொள்ளக் கொண்டிருப்பவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

* இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 5,85,474 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 17,412ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி