யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான இந்தியர்கள் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. ஹாங்காங்கிலிருந்து ஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் ஒரு பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், பிப்ரவரி 3ஆம் தேதி முதல் அந்தக் கப்பல் யோகோஹாமா துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது.
இந்தக் கப்பலில் 132 பணியாளர்கள் 6 பயணிகள் உட்பட 138 இந்தியர்கள் இருந்தனர். இவர்களில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்தியத் தூதரகம் கூறுகிறது.
இதனிடையே, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாத இந்தியர்களை கப்பலிலிருந்து வெளியேற ஜப்பான் அரசு அனுமித்துள்ளது. இதனால், வைரஸ் பாதிப்பு இல்லாத இந்தியர்களை இந்தியா அழைத்துவர இந்தியத் தூதரகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, கோரோனா வைரஸால் பாதிக்கப்படாத 119 இந்தியர்கள் தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர இலங்கையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பெரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் இந்தியாவின் தனி விமானத்தில் டெல்லி வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சிறப்பு முகாமில் தனிமையில் தங்கவைக்கப்படுவார்கள். 14 நாட்களுக்குப் பின் வைரஸ் தொற்று இல்லை என மறுபரிசோதனையில் உறுதியானதும் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தக் கப்பலில் 132 பணியாளர்கள் 6 பயணிகள் உட்பட 138 இந்தியர்கள் இருந்தனர். இவர்களில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்தியத் தூதரகம் கூறுகிறது.
இதனிடையே, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாத இந்தியர்களை கப்பலிலிருந்து வெளியேற ஜப்பான் அரசு அனுமித்துள்ளது. இதனால், வைரஸ் பாதிப்பு இல்லாத இந்தியர்களை இந்தியா அழைத்துவர இந்தியத் தூதரகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, கோரோனா வைரஸால் பாதிக்கப்படாத 119 இந்தியர்கள் தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர இலங்கையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பெரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் இந்தியாவின் தனி விமானத்தில் டெல்லி வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சிறப்பு முகாமில் தனிமையில் தங்கவைக்கப்படுவார்கள். 14 நாட்களுக்குப் பின் வைரஸ் தொற்று இல்லை என மறுபரிசோதனையில் உறுதியானதும் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.