ஆப்நகரம்

கொரோனாவை வைத்து நூதன மோசடி; மூவர் கைது

கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை வைத்து நூதன முறையில் வியாபார மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Samayam Tamil 18 Mar 2020, 9:03 pm
ஹைதராபாத்: கொரோனா பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கும் சானிட்டைசர்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும் நயவஞ்சக கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் 151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 151ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல், முகமுடி அனிந்து கொள்ளுதல், ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு இருத்தல் என பல்வேறு அறிவுறுத்தல்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதுதவிர கொரோனா குறித்து செல்போன்களில் காலர் ட்யூன் மூலமும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தபட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும், பொதுமக்கள் பீதியடைய வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்


இதனிடையே, கொரோனா பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கும் சானிட்டைசர்கள் எனப்படும் கிருமி நாசினி, முகமுடி உள்ளிட்டவைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுமாதிரியான நெருக்கடியான காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து தட்டுப்பாடு போன்ற நிலையை ஏற்படுத்தி, அதிக விலைக்கு நிறுவனங்கள் விற்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால், அத்தகைய செயல்களில் ஈடுபட கூடாது என அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியில் போலி சானிட்டைசர்கள் தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்ற போலீசார் அங்கிருந்து தலா 100 மி.லி. பாட்டில்களைல் அடைக்கப்பட்ட 25,000 சானிட்டைசர்கள், ரூ.40 லட்சம் மதிப்புள்ள மூல பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்பதிவுகள் ரத்து; கட்டணங்களை திரும்பக் கொடுக்கப் பரிசீலனை

அத்துடன், போலி சானிட்டைசர்கள் தயாரித்து விற்பனை செய்ததாக மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 1 லட்சம் பாட்டில்கள் போலி சானிட்டைசர்களை ரூ.1.4 கோடிக்கு அவர்கள் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதுதவிர, Ayush Softgel Capsules & Syrups என்ற பெயரில் சானிட்டைசர்கள் தயாரிக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் உரிமம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி