ஆப்நகரம்

கொரோனா வந்துவிட்டதாக பயந்து கணவன், மனைவி தீக்குளித்து தற்கொலை..!

உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர், அவருடைய மனைவி ஆகியோர் தங்களுக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Mar 2020, 2:26 pm
தமிழகத்தில் உருவெடுத்துள்ள கொரோனாவால் புதியதாக மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கையானது 35ஆக தற்போது உயர்ந்துவிட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா தொற்று பெரும்பாலும் கட்டுக்குள் இருந்து வருகிறது.
Samayam Tamil கொரோனா வந்துவிட்டதாக பயந்து கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை


இந்த நிலையில் கொரோனா வந்துவிட்டதோ என்ற அச்சத்தில் கணவன், மனைவி இரண்டு பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருக்கும் பிரகாஷ் நகரை சேர்ந்த தம்பதி சதீஷ்,வெங்கடலட்சுமி. சதீஷ் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நிலையில், குழந்தைகள் இல்லாத இரண்டு பெரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே பிழைப்பு நடத்தி வந்தனர்.


சதீஷ்க்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து டயாலிசிஸ் மூலம் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்தநிலையில் அவர்கள் இன்று காலை வீட்டிற்கு வெளியே உள்ள காலி இடத்தில், தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்கள் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தங்களுக்கு கொரானா ஏற்பட்டு உடல்நிலை மோசமாகிவிட்டது. எனவே வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்திருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

வெளிநாட்டு பயணத்தை மறைத்தால் இதுதான் தண்டனை; அதுவும் மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!

தீயில் கருகிய கணவன், மனைவி இருவரது உடல்களும் சம்பவ இடத்திலேயே மருத்துவ குழுவினர் மூலம் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வரும் சூழலில் கணவன், மனைவி எடுத்துள்ள இந்த அவசர முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி