ஆப்நகரம்

வெளிநாட்டு பயணத்தை மறைத்தால் இதுதான் தண்டனை; அதுவும் மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!

வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய விஷயத்தை முறையாக அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தால் அதற்கான தண்டனையை பெற்றே ஆக வேண்டும்.

Samayam Tamil 27 Mar 2020, 1:25 pm
நாடு முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதற்கேற்ப பொதுமக்களும் உறுதுணையாக விளங்க வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பேருதவியாக இருக்கும். இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசம் கங்ரா பகுதியை சேர்ந்த 63 வயதான மூதாட்டி ஒருவர், தான் துபாய் சென்றுவிட்டு நாடு திரும்பியதை மறைத்துள்ளார். இது எவ்வளவு பெரிய தவறு.
Samayam Tamil ஹிமாச்சலில் கொரோனா


பின்னர் கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது நடந்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளிநாட்டு பயணத்தை மறைத்த குற்றத்திற்காக சட்டப்பிரிவு 270ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

தற்போது மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதேபோல் கங்ராவை சேர்ந்த 32 வயதான நபர் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து திரும்பியுள்ளார். இவர் மீதும் சட்டப்பிரிவு 270ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வேலை இல்லை; உணவு இல்லை- வேற வழி? தண்ணீரை மட்டும் அருந்தி சாகசப் பயணம்!

மேலும் இந்தோனேசியாவில் இருந்து சிம்லா திரும்பிய தம்பதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் முறையாக தகவல் தெரிவிக்காத காரணத்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் ஹிமாச்சல் பிரதேசத்தில் லாக் டவுன் உத்தரவை மீறியதால் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலாஸ்பூர் மற்றும் சிம்லா மாவட்டங்களில் இருந்து முறையே 20 மற்றும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிர்மாவூரில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். நேற்றைய தினம் 40 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி