ஆப்நகரம்

கொரோனா: 1.28 லட்சம் பரிசோதனை மாதிரிகள்... கன்ஃபார்ம் கேசஸ் எவ்வளவு தெரியுமா?

கொரோனா தொற்று கண்டறியதற்கான பரிசோதனை மாதிரிகளின் எண்ணிக்கை 1,28 லட்சத்தை கடந்துள்ளது.

Samayam Tamil 9 Apr 2020, 12:43 am
தேசிய அளவில் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு அதனை உறுதி செய்வதற்காக இதுநாள்வரை (ஏப்ரல் 8) வரை, மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 919 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) தெரிவித்துள்ளது.
Samayam Tamil cv test


நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மையங்கள் மற்றும் தனியார் மையங்களில் கொரோனா தொற்றை உறுதிசெய்வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில் இதுநாள்வரை (ஏப்ரல் 8) மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 919 ரத்த, சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தனிநபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று மொத்தம் 5,114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு: இந்தியாவின் இன்றைய நிலவரம் என்ன?

புதன்கிழமை மட்டும் (ஏப்ரல் 8) நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களின் 13 ஆயிரத்து 143 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் புதிதாக 320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனையை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அதிரடியாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி