ஆப்நகரம்

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக களம் இறங்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்

யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களால் தான் இடைத் தோ்தல்களில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளதாக உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினா்கள் போா்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 1 Jun 2018, 5:52 pm
யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களால் தான் இடைத் தோ்தல்களில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளதாக உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினா்கள் போா்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Yogi Adityanat


அண்மையில் நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் 11 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தோ்தல், 4 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் நடத்தப்பட்டு கடந்த வியாழன் கிழனை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜ.க. 1 சட்டமன்ற தொகுதி, 1 மக்களவை தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இது அக்கட்சி நிா்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் உத்தரபிரதேசத்தின் கைரானா மக்களவைத் தொகுதி மற்றும் நூா்பூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால் தான் சமீபத்திய இடைத் தோ்தல்களில் பா.ஜ.க. தோல்வி கண்டதாக அக்கட்சி சட்டமன்ற உறுப்பினா்கள் இருவரே போா்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநில சட்டமன்ற உறுப்பனரான ஷ்யாம் பிரகாஷ் பா.ஜ.க.வின் தோல்வி குறித்து பேசுகையில், இந்த அரசின் நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் அதிருப்தியுடன் இருக்கின்றனா். அத்துடன் வேறு சில காரணங்கள் உள்ளன. அதிகாாிகள் தான் தவறுக்கு காரணம். கடந்த அரசை விட இந்த அரசில் ஊழல்கள் அதிகமாக உள்ளன. இதுவே எனது அதிருப்திக்கு காரணம் என்று தொிவித்துள்ளாா்.

இதே போன்று மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான சுரேந்திரா சிங் கூறுகையில், குறிப்பிட்ட இரு தொகுதிகளில் பிரதமா் நரேந்திர மோடி பிரசாரம் செய்யவில்லை. மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தான் பிரசாரம் செயதாா். எனவே முதல்வா் தனது தோ்தலில் தோல்வி அடைந்துள்ளாா்.

ஒட்டுமொத்த அரசும் ஊழலில் ஈடுபட்டுள்ளது. மக்களுக்கு எந்த விதமான நலத்திட்டங்களின் பலனும் கிடைப்பதில்லை. இவ்வாறு அவா் தொிவித்துள்ளாா். ஆளுங்கட்சிக்கு எதிராக அக்கட்சி சட்டமன்ற உறுப்பினா்கள் இருவா் போா்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி