ஆப்நகரம்

சிதம்பரத்தை கைது செய்ய ஆக., 1 வரை தடை

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய ஆக., 1 வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Jul 2018, 1:45 pm
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய ஆக., 1 வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil CHIDAMBARAM-INDIA-POLITICS-ED-MONEY-LAUNDERING


ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு பெறவும் ப.சிதம்பரம் உதவியதாக குற்றச்சாட்டப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் ப.சிதம்பரம் திங்ட்கிழமை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று அந்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, நேற்று முன்தினம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி