ஆப்நகரம்

’சூப்பர் ஸ்பிரெட்டர்’ ஆன திருமணம்; ஒரேநாளில் புதுமாப்பிள்ளை பலி - 100 பேருக்கு கொரோனா!

திருமண நிகழ்வு ஒன்று வைரஸ் பரவலுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Jul 2020, 2:36 pm
பீகார் மாநிலம் பாட்னாவில் திருமணம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மணமகன் பாலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். இவர் குர்கானில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜூன் 15ஆம் தேதி அன்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தடையை மீறி 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணத்தின் போது மணமகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் பாட்னா மருத்துவமனையில் வயிற்றுப் போக்கிற்காக சிகிச்சை பெற்றுள்ளார். இது கோவிட்-19 பாதிப்பிற்கான அறிகுறி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கான பரிசோதனைகள் எதுவும் செய்யாமல் மருந்துகள் மட்டும் எடுத்துக் கொண்டு திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி உள்ளனர்.
Samayam Tamil Bihar Wedding


அதனை மணமகனும் ஏற்றுக் கொண்டு திருமணத்தில் கலந்து கொண்டார். அனைத்து சம்பிரதாயங்களும் முடிவுற்ற பின் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அப்போது மணமகனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதற்கடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனா தடுப்பு; குப்புற கவிழ்ந்த பெங்களூரு ’மாடல்’ - அப்படி என்ன நடந்தது?

அதன்பிறகும் யாரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள முன்வரவில்லை. இதுபற்றி வெளியே தெரிவிக்காமல் இறுதிச் சடங்குகளை குடும்பத்தினர் செய்து முடித்துள்ளனர். இதற்கடுத்த சில நாட்களில் உயிரிழந்த நபரின் உறவினர்களுக்கு படிப்படியாக கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒவ்வொருவராக 15 பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பற்றி மாவட்ட மேஜிஸ்ட்டிரேட்டிற்கு சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஜூன் 15ஆம் தேதி திருமணம் மற்றும் மணமகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவருக்கும் ஜூன் 24 முதல் 26ஆம் தேதி வரை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

12 ஆண்டுகளில் இல்லாத ஆச்சரியம்; எப்ப தெரியுமா? - கொட்டித் தீர்த்த பெருமழை!

திருமண நிகழ்வுகளிலும் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் எப்படி இத்தனை பேர் பங்கேற்றனர் என்று விசாரணை நடத்த மாவட்ட மேஜிஸ்ட்டிரேட் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் திருமண நிகழ்வு தொடர்பாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியிருப்பதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி