ஆப்நகரம்

இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்திகள், அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 27 Apr 2020, 9:17 pm
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27 ஆயிரத்து 890ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 881ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil இந்தியாவில் கொரோனா


LIVE UPDATES:

* இந்தோனேசியாவில் இருந்து வந்த தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் 11 பேர் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் ஏப்ரல் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஏப்ரல் 28ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்படுவர் - காவல்துறை

* கொரோனா வைரஸ் இடர்பாடுகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்

* கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 28,380ஆக உயர்ந்துள்ளது. 6362 பேர் குணமடைந்துள்ளனர். 886 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 பேர் பலியாகியுள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

* அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் 2.5 மணி நேரமாக நடத்திய ஆலோசனைக் கூட்டம் முடிவுக்கு வந்தது.

* தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். அதில் கோவிட்-19 நிலவரம் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

* புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு மத்திய அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் - சிவ சேனா

* பிரதமர் மோடியுடனான வீடியோ கான்பரன்சிங்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அம்மாநில தலைமை செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்வார். தங்களது பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக மத்திய அரசுக்கு கேரள அரசு அளித்துள்ளது.

* மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஒடிசா, பீகார், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி வருகிறார்.

* ராஜஸ்தானில் கோவிட்-19 பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. ஜெய்ப்பூரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நகரில் மொத்த பலி 24ஆக அதிகரித்துள்ளது.

* ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா பாதிப்பு நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

* ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாராவில் முதல் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 83ஆக அதிகரித்துள்ளது.

* ஒடிசா மாநிலம் பாலசோரே மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 108ஆக அதிகரித்துள்ளது.

* ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக வைரஸை வீழ்த்தி விடுவோம் என்று பிரார்த்தனை செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம் ரம்ஜானை முழு உற்சாகத்துடன் கொண்டாடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

* மும்பையில் 53 வயதான தலைமை கான்ஸ்டபிள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கொல்கத்தாவில் 60 வயதான அரசு மருத்துவர் ஒருவர் வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளார்.

* லக்னோவில் கட்டுப்பாடுகள் உடன் பண்டிகைகள் கொண்டாட போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதுதொடர்பாக 21 வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளனர்.

வரியைக் கூட்டு கொரோனாவுக்கு வேட்டு - சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.ஆர்.எஸ் பரிந்துரை!

* டெல்லியில் கோவிட்-19 பாதிப்பு நேற்றைய தினம் கடந்த 10 நாட்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. புதிதாக 293 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

* மும்பையில் இருந்து பிரயாக்ராஜ் திரும்புவதற்கு காய்கறிகள் வாங்கி லாரியில் ஏற்றிக் கொண்டு ஊரடங்கு தடைகளைக் கடந்து சென்றுள்ளார்.

அடுத்த செய்தி