ஆப்நகரம்

கொரோனா பாதிப்பு 700% உயர்வு.. மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா பாதிப்பு கடும் வேகத்தில் உயர்ந்து வருவதாக மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.

Samayam Tamil 4 Dec 2021, 7:43 pm
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து கடந்த சில மாதங்களாக இயல்புநிலை திரும்பியுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரமாக கொரோனா பாதிப்பு கடும் வேகத்தில் உயர்ந்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Samayam Tamil covid test


குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கடந்த 14 நாட்களாக கொரோனா வைரஸ் கடும் வேகத்தில் பரவி வருவதாக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 13 மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதீத வேகத்தில் உயர்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், “பெங்களூருவில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நவம்பர் 25ஆம் தேதி இறுதியில் 8ஆக இறப்பு எண்ணிக்கை டிசம்பர் 2ஆம் தேதி 14ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிக் குழந்தைகளை கடித்த வெறிநாய்.. ஆத்திரத்தில் நாயை கொன்ற பொதுமக்கள்!
தமிழகம் கேரளம், ஒடிசா, மிசோரம், ஜம்மூ காஷ்மீர், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தில், கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தவும், இறப்பு எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 736 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதேபோல கேரளம், ஒடிசா, மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதாக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்த செய்தி