ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வாழ்க்கை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் கோவிட்-19 பாதிப்பு மட்டும் குறையவில்லை. தற்போதைய சூழலில் இதற்கு ஒரே தீர்வு பரிசோதனைகளை அதிகப்படுத்தி நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதே ஆகும். இதற்கான ஆய்வக கட்டமைப்புகளை அரசு மேலும் அதிகரிக்க வேண்டும். இந்நிலையில் தான் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம்(IISC) மொபைல் கோவிட்-19 லேப் ஒன்றை வடிவமைத்துள்ளது.
இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் RT-PCR பரிசோதனை வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதனை கர்நாடக மருத்துவ மற்றும் கல்வித்துறை அமைச்சர் டாக்டர்.கே. சுதாகர் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்துள்ளார்.
கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மாதெரபி சிகிச்சையா? - எச்சரிக்கும் எய்ம்ஸ்!!
இதுபற்றி அமைச்சர் சுதாகர் கூறுகையில், இந்த வேன் மூலம் ஒரு மாதத்தில் 9,000 பேருக்கு பரிசோதனைகள் செய்ய முடியும். இந்த பரிசோதனைகள் மூலம் வெறும் 4 மணி நேரத்தில் 100 சதவீத துல்லியமான முடிவுகள் கிடைக்கும். கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் மாலிகுலர் டயக்நோஸ்டிக் டெஸ்டிங்கிற்கு இந்த மொபைல் ஆய்வகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் H1N1(பன்றி காய்ச்சல்), HCV(ஹெப்பாடிடிஸ் சி), TB(எலும்புருக்கி நோய்), HPV(ஹூமன் பாபில்லோமா வைரஸ்), HIV போன்ற பாதிப்புகள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளலாம். இந்த மொபைல் லேப்பிற்கு MITR(Mobile Infection Testing and Reporting) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பெங்களூருவில் உள்ள ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மாரடைப்புக்கு வழிவகுக்கும் கொரோனா: புதிய தகவலால் அதிர்ச்சி
நாட்டின் முதல் கொரோனா வைரஸ் டெஸ்டிங் மொபைல் லேப், கடந்த ஜூன் மாதம் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் ஒருநாளில் 50 RT-PCR மற்றும் 200 ELISA பரிசோதனைகளை செய்ய முடியும். இரண்டு இயந்திரங்கள் இருந்தால் நாளொன்றுக்கு 8 மணி நேரத்தில் 500 என்ற எண்ணிக்கையில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் RT-PCR பரிசோதனை வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதனை கர்நாடக மருத்துவ மற்றும் கல்வித்துறை அமைச்சர் டாக்டர்.கே. சுதாகர் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்துள்ளார்.
கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மாதெரபி சிகிச்சையா? - எச்சரிக்கும் எய்ம்ஸ்!!
இதுபற்றி அமைச்சர் சுதாகர் கூறுகையில், இந்த வேன் மூலம் ஒரு மாதத்தில் 9,000 பேருக்கு பரிசோதனைகள் செய்ய முடியும். இந்த பரிசோதனைகள் மூலம் வெறும் 4 மணி நேரத்தில் 100 சதவீத துல்லியமான முடிவுகள் கிடைக்கும். கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் மாலிகுலர் டயக்நோஸ்டிக் டெஸ்டிங்கிற்கு இந்த மொபைல் ஆய்வகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் H1N1(பன்றி காய்ச்சல்), HCV(ஹெப்பாடிடிஸ் சி), TB(எலும்புருக்கி நோய்), HPV(ஹூமன் பாபில்லோமா வைரஸ்), HIV போன்ற பாதிப்புகள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளலாம். இந்த மொபைல் லேப்பிற்கு MITR(Mobile Infection Testing and Reporting) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பெங்களூருவில் உள்ள ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மாரடைப்புக்கு வழிவகுக்கும் கொரோனா: புதிய தகவலால் அதிர்ச்சி
நாட்டின் முதல் கொரோனா வைரஸ் டெஸ்டிங் மொபைல் லேப், கடந்த ஜூன் மாதம் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் ஒருநாளில் 50 RT-PCR மற்றும் 200 ELISA பரிசோதனைகளை செய்ய முடியும். இரண்டு இயந்திரங்கள் இருந்தால் நாளொன்றுக்கு 8 மணி நேரத்தில் 500 என்ற எண்ணிக்கையில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.