ஆப்நகரம்

விடாமல் துரத்தும் கொரோனா; காத்திருக்கும் அடுத்த ஆபத்து - எச்சரிக்கும் அரசு!

கொரோனா இரண்டாவது அலையில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் நிதி ஆயோக் உறுப்பினர் விடுத்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 May 2021, 8:53 am

ஹைலைட்ஸ்:

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொடும் - நிதி ஆயோக்
  • மீண்டும் அடுத்த அலை ஏற்பட்டு பாதிப்பு அதிகரிக்கும் என எச்சரிக்கை
  • எனவே மாநில அரசுகள் விரைவாக தயாராக வேண்டியது அவசியம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil India Coronavirus
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை அதிவேகமெடுத்துள்ளது. இதுபற்றி மத்திய அரசு முன்கூட்டியே கணிக்காத காரணத்தால் தான் நிலைமை இவ்வளவு மோசமடைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், இரண்டாவது அலை பற்றி அரசுக்கு எதுவும் தெரியாது என்று குற்றம்சாட்டுவது சரியல்ல.

எங்கள் தரப்பில் இருந்து உரிய எச்சரிக்கைகளை அவ்வப்போது பிறப்பித்து தான் வந்துள்ளோம். கடந்த மார்ச் 17ஆம் தேதியே இதுதொடர்பாக பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். அதேசமயம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தாமல் நிலைமையை கையாள அறிவுறுத்தியிருந்தார். இந்திய மக்களில் பெரும்பாலானோர் எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலையில் இருக்கின்றனர்.
கண்டிப்பாக இல்லை; சபரிமலை அய்யப்பன் கோயிலில் பக்தர்களுக்கு ஷாக்!
இதனால் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதில் பெரிய சவால் நீடிக்கிறது. தற்போதைய வைரஸ் பாதிப்பு உச்சம் தொடும். அதன்பின்னர் மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்கும். எனவே அதற்கேற்ப மாநில அரசுகள் தயாராக வேண்டும். உள்கட்டமைப்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இந்தியா மட்டுமல்ல.

சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த தல: கொரோனா நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய அஜித் குமார்!
உலகின் பல்வேறு நாடுகளும் இதுபோன்று கொரோனாவின் பல்வேறு அலைகளை சந்தித்துள்ளன. எனவே யாரும் பயப்பட வேண்டாம். நிலைமையை ஒன்றாக எதிர்கொள்வோம். கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதி தேவஸ்தானம் செஞ்ச சூப்பர் ஏற்பாடு; மனமார நன்றி சொல்லும் பக்தர்கள்!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், தினசரி புதிய பாதிப்புகள் கடந்த மூன்று நாட்களாக சற்றே குறைந்திருக்கிறது. ஆனால் 10 மாநிலங்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமான பாசிடிவ் விகிதம் காணப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயம் என்று குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி