ஆப்நகரம்

கொரோனா: ஆம்புலன்ஸில் வைத்து தேர்வெழுதிய மாணவர்!

கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் ஆம்புலன்ஸில் வைத்து தேர்வெழுதிய சம்பவம் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 7 Oct 2020, 4:29 pm
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், திருநாக்கரா பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். அந்த கல்லூரியில் நடைபெற்ற இறுதி தேர்வுக்கு தயாராகி வந்த மாணவருக்கு, திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, கொரோனாவுக்கான சிகிச்சை பெறு வந்த அந்த மாணவரால் தேர்வெழுத முடியாமல் போனது. ஆனால், தேர்வு எழுத வேண்டும் என்று மாணவர் விருப்பம் தெரிவித்ததால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஆம்புலன்ஸில் அந்த மாணவர் தேர்வு மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, தேர்வுக்கான வினாத்தாளை மாணவருடன் வந்த சுகாதரத்துறையினரிடம் தேர்வு கண்காணிப்பாளர்கள் வழங்கினர். அவர்கள் அதனை மாணவரிடத்தில் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

முக்கிய குற்றவாளிகள் கைது; அனல்பறக்கும் கேரள தங்கக் கடத்தல் வழக்கு!

அதன்பிறகு ஆம்புலன்ஸில் வைத்து சுமார் 2 மணி நேரம் அந்த மாணவர் தேர்வெழுதியுள்ளார். மாணவருடைய விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அந்த மாணவர் மீண்டும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கொரோனா காரணமாக கேரளாவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், தேர்வுகள் அந்தந்த மையங்களிலேயே நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் கேரளாவில் குறைந்த நிலையில், அம்மாநிலத்தில் மீண்டும் தொற்றின் வீரியம் அதிகரித்து வருவதால், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி