ஆப்நகரம்

ஓடுபாதையில் மாடு; தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

அகமதாபாத் விமான ஓடுபாதைக்குள் மாடு வந்ததால், இரண்டு விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TOI Contributor 11 Jan 2018, 5:56 pm
அகமதாபாத் விமான ஓடுபாதைக்குள் மாடு வந்ததால், இரண்டு விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil cow on runway 2 planes abort landing at ahmedabad and head to mumbai
ஓடுபாதையில் மாடு; தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்ட விமானங்கள்!


சாலைகளில் சாரமாரியாக ஆடு, மாடுகள் திரிவிதுண்டு. மாநகராட்சி நிர்வாகமும் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும், நமது ஊரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், அகமதாபாத் விமானநிலையம் ஓடுபாதைக்குள்ளும் மாடு ஒன்று புகுந்ததால், பெரும் சிரமம் ஏற்பட்டது.

அகமதாபாத் விமான நிலையத்தில், இன்று காலை மாடு ஒன்று சென்று விட்டு, விமான ஓடுபாதையிலேயே நின்றுள்ளது. அந்நேரத்தில், அங்கு வந்த சர்வதேச விமானம் ஒன்று, ஒடுதளத்தில் மாடு நிற்பதைக் கண்டு தரையிறங்க முடியாததால், விமான அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து விமானம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் அகமதாபாத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதே போல், கார்கோ எனும் உள்நாட்டு விமானமும் அகமதாபாத்தில் தரையிறக்க முடியாமல், மும்பை திருப்பி விடப்பட்டது.

அடுத்த செய்தி