ஆப்நகரம்

பசுக்கள் மீது கை வைத்தால் அவ்வளவு தான்; முதல்வர் போட்ட அதிர்ச்சி உத்தரவு!

பசுக்கள் கொல்லப்படுவதை எந்த காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Oct 2020, 2:40 pm
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பசுக்கள் மீதான அக்கறை அதிகரித்துள்ளது. எந்தவொரு காரணத்திற்காகவும் பசுக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என்று கூறி வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் பசு வதைச் செய்ததாக கூறி பலரும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சந்தேகம் இருந்தால் கூட விட்டு வைப்பதில்லை. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பங்கர்மாவு சட்டமன்ற தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், பசுக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
Samayam Tamil Yogi Adityanath


இந்த செயலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். பசுக்களை பாதுகாக்கவும், உணவளிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் காப்பகங்கள் கட்டப்படவுள்ளன. இதற்காக மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

உத்தரப் பிரதேச அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள பொது நலத்திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தும் போது பொதுமக்களை சாதி மற்றும் மத ரீதியாக பிரித்துப் பார்ப்பதில்லை.

அடேங்கப்பா! இவ்ளோ ஆச்சரியங்கள் ஒளிஞ்சிருக்கா? அப்போ உடனே பாத்துடணும்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சில மாஃபியாக்கள் அரசியல் கட்சிகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். ஆனால் அவர்களது சட்டவிரோத கட்டடங்கள் அனைத்தும் இடித்து தள்ளப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் PMAY திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தர உதவிகரமாக உள்ளது. சமூக ரீதியான மோதல்களை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறினார்.

அடுத்த செய்தி