ஆப்நகரம்

பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை: குஜராத்தில் புதிய சட்டம்

பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டத்தின் மூலம் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

TNN 31 Mar 2017, 4:17 pm
காந்திநகர்: பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டத்தின் மூலம் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil cow slaughter leads to lifetime prison new bill passed in gujarat
பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை: குஜராத்தில் புதிய சட்டம்


குஜராத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு பசுவதை தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் மோடி, விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், புதிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, பசுவை துன்புறுத்தினால், ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் சிறை ஆகியவை தண்டனையாக விதிக்கப்படும். அந்த சட்டத்தை மேலும் கடுமையாக்க முதலமைச்சர் விஜய் ரூபானி விருப்பம் தெரிவித்தார். இந்நிலையில் புதிய சட்ட மசோதா இன்று குஜராத் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

அதன்படி பசுவை கொன்றால், ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தல் செய்யப்பட்டது. எம்.எல்.ஏக்களின் ஆதரவை தொடர்ந்து, மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. குஜராத் மாநிலம் உனாவில் கடந்த ஆண்டு, பசு மாட்டின் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர்கள் பசு பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். அது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்தகைய சமூக விரோதிகள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

Cow slaughter leads to lifetime prison new bill passed in Gujarat.

அடுத்த செய்தி