ஆப்நகரம்

CoWIN ஆப் சிக்கல்; தடுப்பூசியால் பக்க விளைவுகள் - வெற்றி கொள்ளுமா இந்தியா?

முதல் நாள் முகாமில் பல்வேறு இடங்களில் கோவின் சர்வரில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

Samayam Tamil 17 Jan 2021, 9:19 am
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் கோவாக்சின், கோவிஷீல்ட் என இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது. இதன் முடிவுகள் முழுவதுமாக கிடைப்பதற்குள் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Samayam Tamil cowin platform issues and side effects of coronavirus vaccine first drive in india
CoWIN ஆப் சிக்கல்; தடுப்பூசியால் பக்க விளைவுகள் - வெற்றி கொள்ளுமா இந்தியா?


முதல்கட்ட முகாம் தொடக்கம்

இந்த சூழலில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நிகழ்வை பிரதமர் மோடி நேற்று (ஜனவரி 16) தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைத்துள்ளார். இதற்காக லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். முதல்கட்டமாக முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் மூன்று கோடி சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள் அடங்குவர்.

கோவாக்சின் மீதான அச்சம்

இதையடுத்து 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளான 30 கோடி பேருக்கு அடுத்தகட்டமாக தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் தடுப்பூசி இருப்பிற்கு ஏற்ப வரும் ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோவாக்சின் மீதான அச்சத்தால் பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


5 முதல் 8ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு: தேதி வெளியிட்ட மாநில அரசு!

கோவின் சர்வர் பிரச்சினை

மேலும் நாட்டின் 3,352 மையங்களில் கோவின் (Co-WIN) இணைய சேவையை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக தன்னார்வலர்களின் பெயர்களின் பட்டியலை பதிவேற்றம் செய்வதில் தாமதம் உண்டானது. மேலும் நேற்றைய கோவின் செயல்திட்டத்தில் இல்லாத பலர், புதிதாக பெயரைச் சேர்த்துக் கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்த சர்ச்சை

புனே உள்ளிட்ட சில நகரங்களில் ஆட்டோமேட்டிக் எஸ்.எம்.எஸ் சரியாக செயல்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிகாரிகள் மாற்று வழிகளை கையாண்டுள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில், கோவின் ஆப் இணைய செயல்பாட்டில் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படவில்லை. சிறிய அளவில் தான் பிரச்சினை ஏற்பட்டது. இது விரைவாக சரிசெய்யப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க்

இதையடுத்து முதல் நாள் தடுப்பூசி முகாம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோவின் பிளாட்பார்மின் வேகம் மற்றும் செயல்பாடு ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்துவிதமான சர்வர் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கின்றன. நேற்றைய தினம் பதிவேற்றம் செய்ய முடியாத சுகாதாரப் பணியாளர்களின் பெயர்களை விரைவாக பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவித்தார்.

தடுப்பூசியால் பக்கவிளைவுகள்

இந்நிலையில் நேற்றைய தினம் தடுப்பூசி கொண்டவர்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 99 பேருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெலங்கானாவைச் சேர்ந்த 11 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 22 பேர், டெல்லியைச் சேர்ந்த 52 பேர், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 14 பேர் அடங்குவர்.


தில் இருக்கானு சவால் விட்ட நெட்டிசன்ஸ்: செஞ்சு காட்டிய விஜய்

தொடர் கண்காணிப்பு

டெல்லியில் பாதிப்பிற்கு ஆளான 52 பேரில் 51 பேருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே இருந்துள்ளன. ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொல்கத்தாவில் செவிலியர் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்ட சில நிமிடங்களில் சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அடுத்த செய்தி