ஆப்நகரம்

மாடுகளுக்கு ஸ்வெட்டர்; உத்தரப்பிரதேச அரசு நூதனம்!

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து மத்திய அரசும் சரி, பாஜக ஆளும் மாநில அரசுகளும் சரி, மனிதர்களை விட மாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன

Samayam Tamil 25 Nov 2019, 8:25 pm
அயோத்தி: கடும் குளிரில் இருந்து பசு மாடுகளை காப்பாற்ற அவற்றுக்கு ஸ்வெட்டர் வாங்குவதற்கு உத்தரப்பிரதேச அரசு நிதி ஒதுக்கியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து மத்திய அரசும் சரி, பாஜக ஆளும் மாநில அரசுகளும் சரி, மனிதர்களை விட மாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. பசுவின் பெயரால் மனித படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதன் உச்ச கட்டமாக பசு மாடுகளை விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி விட்டு அதற்கெனெ தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என பாஜக தலைவர் ஒருவர் மனு கொடுத்த கதையெல்லாம் நாம் அறிந்ததே.

அதன் தொடர்சியாக, கடும் குளிரில் இருந்து பசு மாடுகளை காப்பாற்ற, அவற்றுக்கு சணலால் தயாரிக்கப்பட்ட ஸ்வெட்டர் வாங்குவதற்கு அயோத்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன்...! சினிமாவை மிஞ்சும் கெத்து சம்பவம்...

வட மாநிலங்களில் கடும் குளிர் தொடங்கிவிட்ட நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே, அம்மாநில அரசு பசுக்களை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடும் குளிரில் இருந்து பசுக்களை பாதுகாக்க மாடுகளுக்கு ஸ்வெட்டர் வாங்குவதர்கு, அயோத்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக பைசிங்பூரில் உள்ள மாட்டு கொட்டகையில் இருக்கும் 1,200 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் கம்பிளி, கையுறைகளை வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறு பொந்திற்குள் ஒளிந்திருந்த பிரம்மாண்ட அரண்மனை..! இன்று வரை விலகாத மர்மம்...!

சணல் நார் கொண்டு தயாரிக்கப்படும் கம்பிளி ஸ்வெட்டர் ஒன்று ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. கடும் குளிரையும் பசு மாடுகள் சமாளிக்கும் வகையில் மூன்று அடுக்காக கோணி பைகள் வைத்து இந்த ஸ்வெட்டர்கள் தைக்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குளிரில் வாடும் அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவச ஸ்வெட்டர் இன்னும் வழங்கப்படாத நிலையில், பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை ஏராளமானோர் விமர்சித்து வருகின்றனர்.

சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் நாய்...! வைரலாகும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 1.6 லட்சம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1.57 கோடி குழந்தைகளுக்கு இலவச ஸ்வெட்டர் வழங்கும் திட்டம் அக்டோபர் 31ஆம் தேதியே முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், அந்த திட்டம் இன்னும் செயல்பாட்டில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி