ஆப்நகரம்

ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவதைத் தடுப்பது எப்படி?

அவசரத்தில் பயணிகள் பலர் ஓடும் ரயிலில் ஏறவும் இறங்கவும் முயற்சிப்பதால் அசம்பாவிதமாக உயிரிழப்புகள் நேர்வது வாடிக்கையாகியுள்ளது. இதனைத் தடுக்க ரயில்வே அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது.

Samayam Tamil 15 Jan 2019, 6:09 am
பயணிகள் ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவதை தடுக்க ரயில்வே புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
Samayam Tamil maxresdefault


அவசரத்தில் பயணிகள் பலர் ஓடும் ரயிலில் ஏறவும் இறங்கவும் முயற்சிப்பதால் அசம்பாவிதமாக உயிரிழப்புகள் நேர்வது வாடிக்கையாகியுள்ளது. இதனைத் தடுக்க ரயில்வே அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது.

இதன்படி, முதல் சோதனை முயற்சியாக மும்பை புறநகர் ரயில் பெட்டிகளின் வாசல் பக்கத்தில் வெளிப்புறத்தின் மேல்பகுதியில் நீல விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

ரயில் புறப்பட்டதும் எரியத் தொடங்கும் இந்த விளக்கு நீல நிறத்தில் நடைபாதையிலும் ஒளியைப் விழச்செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் புறப்பட்டுவிட்டதை பயணிகளுக்கு தெரிவித்து, ஓடும் ரயிலில் ஏற வேண்டாமென எச்சரிக்கை விடுக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் அனைத்து ரயில் பெட்டிகளின் வாசலிலும் வெளிப்புறத்தில் நீல விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி