ஆப்நகரம்

மோடியின் ஒப்பந்தத்தால் இந்திய அணியில் விளையாடுவாரா ரொனால்டோ?

போர்ச்சுக்கல் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுடன் செய்துள்ள ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்தத்தை நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.

TNN 24 Jun 2017, 11:12 pm
போர்ச்சுக்கல் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுடன் செய்துள்ள ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்தத்தை நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.
Samayam Tamil cristiano ronaldo will now play for india
மோடியின் ஒப்பந்தத்தால் இந்திய அணியில் விளையாடுவாரா ரொனால்டோ?


பிரதமர் நரேந்திர மோடி இன்றும் முதல் போர்ச்சுக்கல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் அவர் போர்ச்சுக்கல் சென்றிருக்கிறார்.

அப்போது, அந்நாட்டு அரசுடன் இணைந்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் மோடியும் போர்ச்சுக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டாவும் கையெழுத்திட்டனர்.

இது குறித்து நெட்டிசன்கள் நக்கலாக பதிவிடத் தொடங்கியுள்ளனர். ஒருவர் மோடியின் இந்த ஒப்பந்தத்தினால் போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்தாட்ட ஹீரோ கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்திய அணிக்காக விளையாட ரெடியாகிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
India just signed an agreement with Portugal. Cristiano Ronaldo will now play for India. 😂 #IndiaPortugalStartup pic.twitter.com/Z1mwcvlEYv — Hoor-E-Pagalika ☪️ (@72hoors) June 24, 2017 மற்றொருவர், கிறிஸ்டியானோ ரொனால்டோவை எப்படியாவது இந்தியாவுக்கு வரவழைத்தால் தான் மோடியின் பயணம் வெற்றிபெற்றதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
i will only label Modi ji's portugal visit as success if he can bring or convince @Cristiano to visit India Once #IndiaPortugalStartup — Abdul/abu salam (@Abdulahmed05) June 24, 2017 #IndiaPortugalStartup @imVkohli & @Cristiano together @narendramodi — NIKHIL GUPTA(PRINCE) (@nikhilprince98) June 24, 2017

அடுத்த செய்தி