ஆப்நகரம்

ரெய்டில் கட்டுக்கட்டாக அள்ளப்பட்ட பணம்; சொத்துக் குவிப்பு வழக்கில் குண்டூர் பில் கலெக்டர் கைது!

சொத்துக் குவிப்பு வழக்கில், பில் கலெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 31 May 2018, 2:58 pm
ஐதராபாத்: சொத்துக் குவிப்பு வழக்கில், பில் கலெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil Bill Collector


ஆந்திர மாநிலம் குண்டூர் நகராட்சியில் பில் கலெக்ட்ராக முத்ரபயினா மாதவ் பணியாற்றி வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு, தனது தந்தை இறந்ததன் விளைவாக மாதவ் பில் கலெக்ட்ராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து 2016ல் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், நகராட்சி ஆணையர் நாகலட்சுமியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாதவ் மீது புகார்கள் குவிந்தன.

இதையடுத்து குண்டூரில் மாதவிற்கு சொந்தமான 7 இடங்கள், மச்சவரம் மற்றும் பொன்னூர் மந்தலில் 2 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை செய்தனர். மாதவின் உறவினர் வீடுகளில் டி.எஸ்.பி தேவானந்த் சாந்தோ தலைமையிலான 8 குழுவினர் சோதனை நடத்தினர்.

இதில் நிலம், பிளாட் தொடர்பான ஆவணங்கள், நகைகள், ரூ.50 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டன. மாதவிற்கு சொந்தமாக 4 வீடுகள், 20 பிளாட்கள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளன.

அருந்தேல்பேட்டில் தனது மனைவி பெயரில் அலுவலகம் ஒன்று உள்ளது. இந்நிலையில் முத்ரபயினா மாதவை, ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

‘Crorepati’ bill collector caught in Guntur.

அடுத்த செய்தி