ஆப்நகரம்

சூப்பர் ஃபிளவர் மூன்... நீங்க பாத்தீங்களா?

வானில் இன்று நிகழ்ந்த 'சூப்பர் ஃபிளவர் மூன்' அதிசயத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

Samayam Tamil 8 May 2020, 1:11 am
'பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றிவரும் சந்திரன் மே மாதம் 7 ஆம் தேதி ( இன்று) பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் முழு நிலவு வழக்கத்தைவிட மிகப் பெரிய அளவில் நம் கண்களுக்கு தெரியும்' நாசா அறிவித்திருந்தது.
Samayam Tamil super moon


மேலும், வியாழக்கிழமை மாலை (மே 7) 4:15 மணியளவில் சூப்பர் மூன் அதன் உச்சபட்ச ஒளியை எட்டும் என்றும் நாசா தெரிவித்திருந்தது.

அதன்படி இன்றிரவு, வானில் ஓர் அதிசய நிகழ்வாக 'சூப்பர் ஃபிளவர் மூன்' தோன்றியது. பெளர்ணமி நாளான இன்று தோன்றியுள்ள சூப்பர் மூன், பௌர்ணமி நாட்களில் வழக்கமாக தோன்றுவதைவிட பெரிதாக காட்சியளித்தது. மேலும், வழக்கத்தைவிட அதிக ஒளியுடன் ஜொலித்தது.

இந்தியர்களை அழைத்து வர புறப்பட்ட 3 கப்பல்கள்!!

இதனை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த அற்புத நிகழ்வை இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் கண்டு களித்தனர்.

இந்த நிகழ்வின்போது பூமியில் மலர்கள் பூத்துக்குலுங்கும் நேரம் என்பதால், இது 'சூப்பர் ஃபிளவர் மூன்' என்று அழைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் விமானப் படையில் முதல் இந்து இளைஞர்

அடுத்த சூப்பர் மூன், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தோன்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி, பௌர்ணமி தினத்தன்று சூப்பர் மூன் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, உலகமே கொரோனா அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், வானில் இன்று தோன்றிய அதிசய நிகழ்வான 'சூப்பர் ஃபிளவர் மூன்' மக்கள் மனதில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி