ஆப்நகரம்

நானும் ராணுவத்தில் சேர விரும்புகிறேன் - புல்வாமாவில் வீரமரணம் அடைந்த ’குரு’வின் மனைவி!

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி, தானும் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Feb 2019, 8:47 pm
கடந்த 14ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
Samayam Tamil Guru Wife


இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த குரு என்ற வீரரும் மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனால் அவரது ஊர் மக்கள் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய குருவின் மனைவி கலாவதி, நானும் ராணுவத்தில் சேர விரும்புகிறேன். எனது கணவர் ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிய விரும்பினார்.

அவரது கனவை நிறைவேற்றும் வகையில், நான் ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகள் சேவை ஆற்ற விரும்புகிறேன். எனது கணவரை நினைத்து, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனெனில் அவர் தேசத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

நமது வீரர்களின் உயிரைப் பறித்த பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அடுத்த செய்தி