ஆப்நகரம்

கொரோனா சிகிச்சை: சிஆர்பிஎஃப் வீரர்கள் அளித்துள்ள நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான சிகிச்சைக்கு உதவும் நோக்கில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) தங்களின் ஒருநாள் ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

Samayam Tamil 26 Mar 2020, 8:43 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆயத்தங்களையும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
Samayam Tamil crpf


கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளவோரின் சிகிச்சை, இதற்கான மருத்துவ உள்கட்டமைப்புகள் மேம்பாட்டுக்கு 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு உதவும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளனர்.

கொரோனா: நிவாரண நிதி அளிக்கும் திமுக!!

இதன்படி மொத்தம் 33 கோடி 81 லட்சம் ரூபாய் பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்படவுள்ளது.

"கொரோனாவை முறியடிக்கும் மிகப்பெரிய சவாலை நாடு இன்று எதிர்நோக்கியுள்ளது. இந்த சவாலில் நாம் வெற்றிபெற பணிரீதியாக தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வோம்" என்று சிஆர்பிஎஃப் வீரர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் கண்ணீர் வழியாகப் பரவுமா?

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்களின் ஒருமாத சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி