ஆப்நகரம்

காஷ்மீர் கல்வீச்சு சம்பவங்களை எதிர்கொள்ள பெண் கமாண்டோ படை தயார்!

கல்வீச்சு சம்பவங்களை எதிர்கொள்ளும் பிரிவில் பெண் கமாண்டோக்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 30 Jun 2018, 4:58 pm
ஸ்ரீநகர்: கல்வீச்சு சம்பவங்களை எதிர்கொள்ளும் பிரிவில் பெண் கமாண்டோக்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil CRPF Lady Commandos


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெண்களும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களை எதிர்கொள்ள பெண் கமாண்டோக்கள் அடங்கிய சிறப்பு படையை சி.ஆர்.பி.எப் உருவாக்கியுள்ளது.

இவர்களுக்கு இரவு நேரப் பாதுகாப்பு, ஆயுதங்களை நொடிப் பொழுதில் பழுது பார்த்தல், கவசமின்றி எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களால், பாதுகாப்பு படையினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அவர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். கடந்த மே 7ஆம் தேதி, சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆர்.திருமணி(22) என்ற பயணி, நர்பல் பகுதியில் நிகழ்ந்த கல்வீச்சில் சிக்கி உயிரிழந்தார்.

அதற்கு முன்பு மே 2ஆம் தேதி, சோபியான் மாவட்டம் ஸவூரா கிராமத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற பேருந்து கல்வீச்சு சம்பவத்தில் சிக்கியது. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சு சம்பவத்தால் 7 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர்.

CRPF ready with women commandos to deal with stone pelters.

அடுத்த செய்தி