ஆப்நகரம்

புதிய ரூபாய் நோட்டை பெற்ற மகிழ்ச்சியில் உயிரிழந்த முதியவர்!

கருப்புபணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் தினம் தினம் ஒருவர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து கொண்டே உள்ளது.

TOI Contributor 17 Nov 2016, 12:13 pm
புதுடில்லி: கருப்புபணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் தினம் தினம் ஒருவர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து கொண்டே உள்ளது.
Samayam Tamil currency ban he got his cash but lost his life
புதிய ரூபாய் நோட்டை பெற்ற மகிழ்ச்சியில் உயிரிழந்த முதியவர்!


இந்தியாவில் கருப்புபணத்தை ஒழிக்க, கடந்த 8ம் தேதி, ரூ. 1000, 500 நோட்டுக்கள் அன்று நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இது பண முதலைகளுக்கு சூடு வைக்கும் செயலாக பார்க்கப்பட்ட நிலையில், இதில் அதிகம் பாதிக்கப்பட்டது சாமானிய மக்களே.

இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்ற வயதானவர் ஒருவர் வங்கியில் தனது பழைய நோட்டை மாற்றிய மகிழ்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் சேர்த்து தற்போது வரை இந்த பணமாற்றத்துக்காக, தற்கொலை செய்தவர்கள் உட்பட பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 40-ஐ தொட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவிர, வங்கி வாசலிலும், ஏடிஎம்., வாசலிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ள மக்கள் கூட்டத்தால், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

அடுத்த செய்தி